மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தெலுங்கு சினிமாவில் 2007ல் சிருதா என்ற படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து ராஜமவுலியின் மகதீராவில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் ரங்கஸ்தலம், ஆர் ஆர் ஆர் என பல முக்கிய படங்களில் நடித்தவர் தற்போது ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் அரசியல் த்ரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 28ம் தேதியான நேற்றோடு திரை உலகில் ராம்சரண் நடிகராகி 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். இதையடுத்து திரை உலகினரும், ரசிகர்களும் சோசியல் மீடியாவில் அவரை வாழ்த்தி வருகிறார்கள். சிரஞ்சீவியும் தனது மகன் ராம்சரணை வாழ்த்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛மகதீராவிலிருந்து ரங்கஸ்தலம், ஆர்ஆர்ஆர் இப்போது ஷங்கருடன் ஆர்சி- 15 வரை சரண் எப்படி நடிகராக உருவெடுத்தார் என்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. ராம்சரணின் ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தான் எடுத்துக் கொண்ட பணியில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம்சரண் மேலும் பல உயரங்களையும் பெருமைகளையும் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார் சிரஞ்சீவி.