ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தெலுங்கு சினிமாவில் 2007ல் சிருதா என்ற படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து ராஜமவுலியின் மகதீராவில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் ரங்கஸ்தலம், ஆர் ஆர் ஆர் என பல முக்கிய படங்களில் நடித்தவர் தற்போது ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் அரசியல் த்ரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 28ம் தேதியான நேற்றோடு திரை உலகில் ராம்சரண் நடிகராகி 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். இதையடுத்து திரை உலகினரும், ரசிகர்களும் சோசியல் மீடியாவில் அவரை வாழ்த்தி வருகிறார்கள். சிரஞ்சீவியும் தனது மகன் ராம்சரணை வாழ்த்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛மகதீராவிலிருந்து ரங்கஸ்தலம், ஆர்ஆர்ஆர் இப்போது ஷங்கருடன் ஆர்சி- 15 வரை சரண் எப்படி நடிகராக உருவெடுத்தார் என்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. ராம்சரணின் ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தான் எடுத்துக் கொண்ட பணியில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம்சரண் மேலும் பல உயரங்களையும் பெருமைகளையும் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார் சிரஞ்சீவி.




