பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை |

மலையாளத்தில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. கடந்த மாதம் அவர் நடிப்பில் வெளியான என்ன தான் கேஸ் கொடு என்கிற படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடிக்கு மேல் வசூலித்து குஞ்சாக்கோ போபன் மார்க்கெட் வேல்யூவை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் அரவிந்த்சாமி உடன் இணைந்து நடித்த ரெண்டகம் திரைப்படம் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில் தற்போது டினு பாப்பச்சன் என்பவர் டைரக்ஷனில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் குஞ்சாக்கோ போபன். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது இவருக்கு வலது கையில் அடிபட்டது. இதனை தொடர்ந்து தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கும் குஞ்சாக்கோ போபன், கையில் கட்டுப்போட்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு, மிகப்பெரிய ஆக்ஷன் கேரக்டர் ஒன்று செய்தபோது அதற்கு கிடைத்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.