ரீ ரிலீஸ் மோதலில் விஜய், அஜித் ரசிகர்கள் | பொன்னான நாட்கள் : இளையராஜாவுடன் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்த கிருஷ்ண வம்சி | 50வது நாளில் இந்தியாவில் 1000 கோடியை நெருங்கும் 'துரந்தர்' | பிளாஷ்பேக்: ‛உதயசூரியன்' எம்ஜிஆர் | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் சினிமாவை விட்டு விலகிய வலம்புரிஜான் | ஆஸ்கர் விருதில் புதிய சாதனை: 16 விருதுகளுக்கு போட்டியிடும் 'சின்னர்ஸ்' | 'சிறை' அக்ஷய் குமாரின் புதிய படம் | பீரியட் படத்தில் நடிப்பது பெருமை : டொவினோ தாமஸ் | 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஆத்மிகா | ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு |

சமீபகாலமாக டிவி சேனல்களிலும், யுடியூப் சேனல்களிலும் பிரபலங்களை பேட்டி எடுப்பவர்கள் பரபரப்பாக ஏதாவது கேட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக சர்ச்சையான, சங்கடப்பட வைக்கின்ற கேள்விகளை கேட்பதை வாடிக்கையாக மாற்றிவிட்டார்கள்.
சமீபத்தில் அப்படி மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஷி என்பவரிடம் சில குதர்க்கமான கேள்விகளை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி கேட்டதால், அவர் கேமராவை ஆப் பண்ண செய்துவிட்டு அந்த தொகுப்பாளினியை அனாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுபற்றி பின்னர் புகார் அளிக்கப்பட்டு அந்த நடிகர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இதேபோன்று இன்னொரு மலையாள சேனலில் கவர்ச்சி நடிகையான ஸ்வேதா மேனன் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளால் கோபமாகி செட்டை விட்டு எழுந்து வெளியே போகும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளர் ஜீவா என்பவர் கேட்ட கேள்விகளுக்கு சீரிய ஸ்வேதா மேனன், “உங்களை பற்றி நான் ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய படங்களை கொஞ்சமாவது பார்த்துவிட்டு அதுபற்றி நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்” என்று கோபமாக கூறிவிட்டு வெளியே கிளம்பிச் செல்கிறார்.
ஆனால் அதன்பிறகு ஒரு சில நொடிகள் கழித்து அந்த வீடியோவில் மீண்டும் செட்டிற்கு திரும்பி வரும் ஸ்வேதா மேனன், தொகுப்பாளரிடம் எப்படி நான் உங்களை பிராங்க் செய்தது.. நன்றாக இருந்ததா ?” என்று கேட்டு பார்வையாளர்களுக்கு டுவிஸ்ட் ஒன்றை அளித்துள்ளார். இதுவும் ஒரு வித பப்ளிசிட்டி ஸ்டண்ட் தான் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.




