'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஷ். சர்வதேச நிறுவனமாக புனி கணெக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரியாக பணியாற்றியவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் மாடல் ஆனார். அதன்பிறகு சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கடைசியாக பூரி ஜெகன்நாத் இயக்கிய மெஹபூபா படம் அவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.
அந்த படமே விஷ்சுக்கு விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்தின் வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஹீரோ ஒரு குத்துச் சண்டை வீரர் என்பதால் அவரை எதிர்த்து நிற்கும் வில்லன் அதைவிட பவர்புல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் பூரி ஜெகன்னாத் சொன்னதால் இரண்டு வருடங்கள் ஜிம்மிலேயே இருந்து கேரக்டருக்காக தன்னை மாற்றினார் விஷ். “இந்த இடத்தை பிடிக்க 12 வருடங்கள் போராட வேண்டியது இருந்தது. இப்போது எனது இலக்கை அடைந்திருக்கிறேன். லைகரில் எனக்கு பெரிய திருப்பத்தை தரும். அதன்பிறகு வில்லன், ஹீரோ என கலந்து நடிப்பேன்”. என்கிறார் ஷிவ். படம் வருகிற 25ம் தேதி வெளிவருகிறது.