தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
பஹத் பாசில் நடித்த அன்னயும் ரசூலும், துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜீவ் ரவி. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நடிகை கீது மோகன்தாசின் கணவர். கம்மட்டிப்பாடம் படத்தை முடித்ததும் மீண்டும் ஒளிப்பதிவாளராக மாறி தனது மனைவி இயக்கத்தில் நிவின்பாலி நடித்த மூத்தோன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
அதை தொடர்ந்து நிவின்பாலி நடிக்கும் 'துறமுகம்' (துறைமுகம்) என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதி நடைபெற்ற நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனதால், இளம் நடிகர் ஆசிப் அலியை வைத்து குட்டாவும் சிக்ஷையும் என்கிற போலீஸ் கதையை இயக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறிமாறி நடைபெற்று முடிந்து, தற்போது இரண்டு படங்களுமே ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாக இருப்பதுதான் ஆச்சர்யம். குட்டாவும் சிக்ஷையும் மே-27ஆம் தேதியும், துறமுகம் படம் ஜூன்-3ஆம் தேதியும் வெளியாக இருக்கின்றன,
துறமுகம் படம் 1940களில் நடைபெறும் கதையாக, துறைமுக தொழிலார்களின் வாழ்வாதார போராட்டங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. குட்டாவும் சிக்ஷையும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லாராக உருவாகியுள்ளது.