'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் | லட்சுமி காந்தன் கொலை வழக்கு பட தகவல்கள் திட்டமிட்டு மறைப்பு | புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால் | சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது ஏன்? : மனம் திறந்த விக்னேஷ் | பிளாஷ்பேக் : பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்த தமிழ் படம் | பிளாஷ்பேக் : தேசிய விருது பெற்ற 'தங்கப்பதுமை' | 'ரஜினிகாந்த் 173': இயக்குனர் மீண்டும் மாற்றம்? | 'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா? | பிறந்தநாளில் குவிந்த ரசிகர்கள் : வாழ்த்து மழையில் இளையராஜா | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு ஆரம்பம் |

கேரளாவை சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் சங்கீதா சஜித். திரைப்பட பின்னணி பாடகியாக மாறிய சங்கீதா, தமிழ், மலையாள மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம் பெற்ற 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை' பாடல் மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக பிருத்விராஜ் நடித்த குருதி படத்தில் பாடி இருந்தார்.
46 வயதான சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். சங்கீதாவின் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




