மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் |

கேரளாவை சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் சங்கீதா சஜித். திரைப்பட பின்னணி பாடகியாக மாறிய சங்கீதா, தமிழ், மலையாள மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம் பெற்ற 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை' பாடல் மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக பிருத்விராஜ் நடித்த குருதி படத்தில் பாடி இருந்தார்.
46 வயதான சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். சங்கீதாவின் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




