இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் செய்துள்ளோம் : அக்ஷய் குமார் | மூன்றாவது முறையாக சுந்தர் சி, வி.இசட் துரை கூட்டணி | சினிமாவுக்கு டாட்டா சொல்கிறாரா திரிஷா? | ரஜினி படத்தில் ஷோபனா: 35 ஆண்டுகளுக்குபின் கூட்டணி | ரஜினி, தனுஷ், சூர்யா நிராகரிப்பு... வேள்பாரிக்கு ஆதரவு கொடுக்கப்போவது யார்? | 9 மில்லியன் பார்வைகளைக் கடந்த ரஜினிகாந்த் அறிக்கை | துரந்தர் 2 : ஹிந்தி தவிர மற்ற மொழி பிரிமியர் காட்சிகள் ரத்து ? | 37 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர்? | சினிமா, அரசியல் சர்ச்சை : ஒரே நாளில் மன்னிப்பு கேட்ட மூவர் | சூப்பர் ஹீரோயின் ஆன அடா சர்மா |

கேரளாவை சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் சங்கீதா சஜித். திரைப்பட பின்னணி பாடகியாக மாறிய சங்கீதா, தமிழ், மலையாள மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம் பெற்ற 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை' பாடல் மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக பிருத்விராஜ் நடித்த குருதி படத்தில் பாடி இருந்தார்.
46 வயதான சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். சங்கீதாவின் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




