அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' படத்தை கைபற்றிய நெட்பிளிக்ஸ் | 'அயலான்' இயக்குனருடன் இணைந்த சூரி | கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி சம்பளம் எவ்வளவு? | என் கால் உடைந்தால் படம் ஹிட்டாகும்: நடிகர் ராஜசேகர் பேச்சு | விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியானது! | சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படத்தின் பிரீ பிசினஸ் 110 கோடி! | கடந்த வாரம் இசையமைப்பாளராக 'ஹாப்பி', இந்த வாரம் நடிகராக 'ஹாப்பி' கிடைக்குமா ? | விஜய் சேதுபதியின் 'ஸ்லம்டாக்' படத்திற்கு புதிய சிக்கல் ? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'சப்தம்' | முக்கிய ஹீரோக்களுடன் அடுத்தடுத்த படங்களில் மமிதா பைஜு |

கேரளாவை சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் சங்கீதா சஜித். திரைப்பட பின்னணி பாடகியாக மாறிய சங்கீதா, தமிழ், மலையாள மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம் பெற்ற 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை' பாடல் மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக பிருத்விராஜ் நடித்த குருதி படத்தில் பாடி இருந்தார்.
46 வயதான சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். சங்கீதாவின் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




