'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் |

'மெளனம் பேசியதே, லேசா லேசா' படங்களில் இருந்து திரிஷாவின் சினிமா பயணம் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் இதுவரை 75க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார். 2002ல் தொடங்கிய அவரின் கலைப்பயணம் 24வது ஆண்டாக தொடர்கிறது. 'தக்லைப்' பட தோல்விக்குபின் திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்போது சூர்யாவுடன் 'கருப்பு', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' ஆகிய 3 படங்களில் மட்டுமே திரிஷா நடித்து வருகிறார்.
41 வயதாகி விட்ட திரிஷா சினிமாவுக்கு முழுக்கு போடப்போகிறார். அவர் சினிமாவில் இனி நடிக்கமாட்டார். அதற்கு காரணம் அவரை சுற்றி நடக்கும் அரசியல் பிரச்னைகள், பஞ்சாயத்துகள். அவரால் படப்பிடிப்பில் நிம்மதியாக நடிக்க முடியாது. ஆகவே, கடந்த சில மாதங்காக அவர் கதை கேட்கவில்லை. புதுப்படங்களில் கமிட்டாகவில்லை. சினிமாவுக்கு டாட்டா சொல்லப்போகிறார் என சில நாட்களாக தகவல் கசிகிறது. அவர் சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகப்போகிறார்.
அதற்காகவும் புதுப்படங்களில் கமிட் ஆக மறுக்கிறார் என்று ஒரு தரப்பும் சொல்கிறது. ஆனால், இதுவரை திரிஷா தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களோ இது ஒருவகை வதந்தி, திரிஷாவுக்கு எதிரானவர்கள் கிளப்பிவிடுகிறார்கள். அவருக்கு சினிமா மீது காதல் அதிகம். எந்த வயதிலும் சினிமாவை விட்டு விலகமாட்டார் என்கிறார்கள்.