சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மீரா ஜாஸ்மின் ரீ என்ட்ரி ஆகியுள்ள படம் மகள். இதில் அவருடன் ஜெயராம், தேவிகா சஞ்ய் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் அம்மா மகளின் உறவு மிக அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மகளாக நடித்துள்ள தேவிகா சஞ்சய் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். இது தொடர்பாக அவர் மீடியாக்களிடம் பேசும்போது ஆனந்த கண்ணீர் வடித்தார். அந்த வீடியோவும், படமும் வைரலாகி வருகிறது.
அவர் கூறியிருப்பதாவது: எனது இதயம் நிறைந்துள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில் நான் அழுதேன், இன்றுவரை அழுது கொண்டிருக்கிறேன். எனது கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது முதல் படமே வெற்றிப் படமாகவும், எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படமாகவும் அமைந்தது இறைவன் கொடுத்து வரம்.
சத்யன் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், சீனிவாசன் சார், சித்திக் சார் உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி, உங்களோடு திரையை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி . என்று கூறியுள்ளார் தேவிகா.