ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி ஆகியோருடன் சேர்ந்து மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டவர் தான் நடிகர் சுரேஷ் கோபி. இடையில் சில காலம் அரசியலில் இறங்கிய சுரேஷ்கோபி, சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி தொடங்கியுள்ள சுரேஷ்கோபி, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த காவல் என்கிற திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் ஜோஷியின் டைரக்ஷனில் அவர் நடித்துள்ள பாப்பான் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு மே ஹூம் மூசா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிமூங்கா என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜிபு ஜேக்கப் தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சுரேஷ்கோபியின் ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இந்தப்படம் குறித்து வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ், அதன் பின்னணியில் ஒலிக்கும் அரபு இசை மற்றும் இந்த படத்தின் டைட்டிலை பார்க்கும்போது இது ஒரு கேங்க்ஸ்டர் பாணியில் உருவாகும் படம் என தெரிகிறது.