லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிகழ்வில் மலையாள நடிகர் திலீப்பும் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மூன்று மாத சிறை தண்டனை பெற்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். நான்கு வருடங்கள் கடந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில் திலீப்பின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கை திசைதிருப்பும் விதமாக சட்ட மற்றும் தார்மீக விதிகளுக்கு புறம்பாக முறையற்ற வகையில் நடந்துகொள்வதாக, பாதிக்கப்பட்ட நடிகை குற்றம் சாட்டியுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேரள பார் கவுன்சிலில் முறையிட்டுள்ளார்.
இந்த புகாரில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ள நடிகை, அவர்கள் அதுபோன்று நடந்துகொண்ட பல தருணங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளாராம்.. குறிப்பாக தங்களது விதி மீறிய நடவடிக்கைகளால் தனது தரப்பு சாட்சிகளான இருபது பேரை கட்டாயப்படுத்தி பிறழ் சாட்சிகளாக மாற்றிவிட்டனர் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
இவர்களது செயல் அதிர்ச்சி தருவதாகவும் மன்னிக்க முடியாததாகவும் இருப்பதாகவும் கூறியுள்ள நடிகை, கேரள பார் கவுன்சில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடுநிலையான உண்மையான விசாரணை நடத்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.