தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு |

பழம்பெரும் மலையாள குணசித்ர நடிகர் கைனகரி தங்கராஜ் காலமானார். 77 வயதான அவர் கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொல்லம் அருகில் உள்ள கேரளாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடும்பத்தினர் அவரை கவனித்து வந்தனர். என்றாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கைனகரி தங்ராஜ் புகழ்பெற்ற மலையாள நாடக கலைஞரான கிருஷ்ணன்குட்டி பாகவதரின் மகன். தந்தை வழியில் 100க்கும் மேற்பட்ட தலைப்பில் 10 ஆயிரம் முறை மேடை ஏறி நடித்தவர்.1978ம் ஆண்டு பிரேம் நசீர் நடித்த அனாப்பச்சன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மோகன்லாலின் லூசிபர் மற்றும் இஷ்க், ஹோம் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கடைசியாக மம்முட்டி நடித்து வரும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் தமிழ் படம். இதுவே கடைசி படமாகவும் ஆனது.