கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிப்பு, டைரக்ஷன் என பிஸியாக இருக்கும் நடிகர் பிரித்விராஜ் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு 'காளியன்' என்கிற படத்தில் நடிக்க போவதாக தானே முன்வந்து பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டார். 300 வருட காலத்திற்கு முந்தைய சரித்திர வீரன் 'குஞ்சிரக்கோட்டு காளி' என்கிற கேரக்டரில் தான் பிரித்விராஜ் நடிக்கிறார்.
தற்போது கொல்லம் பகுதியாக இருக்கின்ற, 1700ஆம் வருடங்களில் வேநாடாக இருந்த பகுதியின் தன்னிகரில்லா தளபதியாக விளங்கிய இரவிக்குட்டி பிள்ளை பற்றிய வரலாறு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. “ஆனால், அவரது விசுவாசமான போர்வீரனான குஞ்சிரக்கோட்டு காளி பற்றிய வீர வரலாறு பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. அவனது வீரம், தியாகம், நாட்டுப்பற்று ஆகியவற்றை பறைசாற்றும் இந்த கதையில் நான் காளியாக நடிக்கிறேன்” என அப்போது பெருமிதத்துடன் பிரித்விராஜ் கூறியிருந்தார். அறிமுக இயக்குனர் மகேஷ் என்பவர் இந்தப் படத்தை இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அறிவிப்பு வெளியாகி நான்கு வருடங்கள் ஆகியும் இப்போதுவரை அந்தப்பட்டம் துவங்கப்படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை.. அதனால் அந்தப்படம் கைவிடப்பட்டதாகவே திரையுலகில் பலரும் கூற ஆரம்பித்தார்கள். இந்தநிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜீவ் கோவிந்தன் சமீபத்தில் பிரித்விராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு காளியன் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்று அறிவித்துள்ளார். பிரித்விராஜ் படங்களிலேயே இந்த படம் அதிக பொருட்செலவில் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.