ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மலையாளம் என பிசியாக இருந்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் மூன்று மாத காலம் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை கொல்வதற்கு திட்டமிட்டதாக திலீப் மீது மீண்டும் வேறு ஒரு வழக்கு பதியப்பட்டு அதிலும் திலீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் திலீப் முதலில் தன் மீது பதியப்பட்ட நடிகை கடத்தல் வழக்கில் கிட்டத்தட்ட முழு விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்தடுத்த விசாரணைகள் நடப்பது வழக்கை திசை திருப்புவதாக இருக்கிறது.. எனவே மேற்கொண்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.. அப்படி இல்லை என்றால் அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அந்த முதல் வழக்கில் மேற்கொண்டு புதிய சாட்சிகளிடம் விசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ள நீதிமன்றம் அதே சமயம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் அந்த வழக்கு விசாரணை முழுவதையும் முடிக்க வேண்டுமென போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளது.