ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
நடிக்கும் எண்ணமே இல்லாமல் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மோகன்லாலின் மகன் பிரணவ், பின்னர் எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டார். முதல் படம் வெற்றி, இரண்டாவது படம் தோல்வி, இதோ சமீபத்தில் வெளியான அவரது மூன்றாவது படமான ஹிருதயம் படம் மூலம் மீண்டும் வெற்றி என, வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வருகிறார் பிரணவ். இந்தப்படம் 50 கோடி வசூல் கிளப்பில் ஏற்கனவே இணைந்து விட்டது.
இந்தநிலையில் தற்போது இமயமலை பகுதியில் ஒரு பயணம் மேற்கொண்டுள்ளார் பிரணவ்.. அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இப்போது மட்டும் அல்ல, தனது முதல் படமான ஆதி ரிலீசான சமயத்திலும் கூட இதேபோல இமயமலைக்கு பயணம் கிளம்பியவர் தான் பிரணவ். அநேகமாக இனி இதையே தனது பாணியாக கடைபிடிக்க ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.