தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” | மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி! | மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா! | இயக்குனர் செல்வராகவனை பிரிகிறாரா கீதாஞ்சலி? | அந்தோணி பாட்டு... கிராமத்து மெட்டு | ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! |

நடிக்கும் எண்ணமே இல்லாமல் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மோகன்லாலின் மகன் பிரணவ், பின்னர் எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டார். முதல் படம் வெற்றி, இரண்டாவது படம் தோல்வி, இதோ சமீபத்தில் வெளியான அவரது மூன்றாவது படமான ஹிருதயம் படம் மூலம் மீண்டும் வெற்றி என, வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வருகிறார் பிரணவ். இந்தப்படம் 50 கோடி வசூல் கிளப்பில் ஏற்கனவே இணைந்து விட்டது.
இந்தநிலையில் தற்போது இமயமலை பகுதியில் ஒரு பயணம் மேற்கொண்டுள்ளார் பிரணவ்.. அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இப்போது மட்டும் அல்ல, தனது முதல் படமான ஆதி ரிலீசான சமயத்திலும் கூட இதேபோல இமயமலைக்கு பயணம் கிளம்பியவர் தான் பிரணவ். அநேகமாக இனி இதையே தனது பாணியாக கடைபிடிக்க ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.




