திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் தீபிகா படுகோனே | அனுஷ்கா போஸ்டரால் ஏற்பட்ட விபத்துகள் : இயக்குனர் ஓபன் டாக் | சினிமா தயாரிப்பிலும் இறங்கும் நடிகர்கள் பட்டியலில் இணைந்த ரவிமோகன் | விமானப்படை அதிகாரி தோற்றத்தில் தனுஷ் | பிளாஷ்பேக்: விஷம் அருந்தி வெள்ளித்திரை வாய்ப்பினைப் பெற்ற ஜே பி சந்திரபாபு | கமல்ஹாசன் சொத்து ரூ.305 கோடி, கடன் ரூ.49 கோடி | ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் |
மலையாள நடிகர் திலீப் ஏற்கனவே கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி 3 மாத சிறைவாசம் அனுபவித்து, அதன்பின் ஜாமினில் வெளியே வந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் அவரது நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர், நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வீடியோ கிளிப்புகளை திலீப் தனது மொபைல் போனில் பார்த்தார் என்றும், அந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்றும் போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் திலீப் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தார் திலீப். கிட்டத்தட்ட 6 முறைக்கு மேல் தள்ளிவைக்கப்பட்ட இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதற்கு முன்னதாக திலீப்பிடம் மூன்று நாட்கள் கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் திலீப்பிற்கு முன்ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திலீப் தரப்பு வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.