எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாள நடிகர் திலீப் ஏற்கனவே கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி 3 மாத சிறைவாசம் அனுபவித்து, அதன்பின் ஜாமினில் வெளியே வந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் அவரது நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர், நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வீடியோ கிளிப்புகளை திலீப் தனது மொபைல் போனில் பார்த்தார் என்றும், அந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்றும் போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் திலீப் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தார் திலீப். கிட்டத்தட்ட 6 முறைக்கு மேல் தள்ளிவைக்கப்பட்ட இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதற்கு முன்னதாக திலீப்பிடம் மூன்று நாட்கள் கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் திலீப்பிற்கு முன்ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திலீப் தரப்பு வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.