லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
த்ரிஷ்யம் பட புகழ் ஜீத்து ஜோசப் தற்போது மோகன்லால் நடிக்கும் டுவெல்த் மேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்த உடன் அடுத்து இயக்க இருக்கும் படம் பற்றி அறிவித்துள்ளார். புதிய படத்திற்கு "கூமன்: தி நைட் ரைடர்" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆசிப் அலி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ரெஞ்சி பணிக்கர், பாபுராஜ் மற்றும் ஜாபர் இடுக்கி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
இதுகுறித்து ஜீத்து ஜோசப் கூறியிருப்பதாவது: இது ஒரு புதிய முயற்சியாக உருவாகும் த்ரில்லர் வகை படம். தலைப்பு பற்றி இப்போது விளக்கமாக கூற முடியாது. ஆனால் கதைக்கும், தலைப்புக்கும் சிறப்பான பொருத்தம் இருக்கும். ஆசிப் அலி அவரது கேரியரில் நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கிறார். வருகிற 24ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.
மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனி இடத்தில் அமைந்திருக்கும் ஒரு ரிசார்ட்டில் நடக்கும் இரவு பார்ட்டியின் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படம். என்கிறார்கள்.