அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
என்.டி.பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் அவரது முந்தைய சாதனைகளை முறியடித்து தற்போதும் ஓடிடி தளத்திலும், தியேட்டரிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஐதராபாத் போக்குவரத்து போலீஸ்.
என்.டி.பாலகிருஷ்ணாவும், படத்தின் நாயகி ஜெய்ஸ் வாலும் ஜீப்பில் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு லாரி குறுக்கே வந்துவிட திடீர் என்று பிரேக் போடுவார் பாலய்யா. இதனால் பக்கத்து சீட்டில் இருக்கும் ஜெய்ஸ்வால் தலை காரின் முன்பகுதியில் போதும். அதனை தன் கை வைத்து தடுக்கும் பாலையா. முதலில் சீட் பெல்ட போட வேண்டும் என்பார்.
இந்த காட்சியை காரில் செல்வபர்கள் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும் என்கிற விழிப்புணர்வுக்காக ஐதராபாத் போலீசார் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திய நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குனர் போயபதி ஸ்ரீனு ஆகியோருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் விழிப்புணர்வுக்கு புஷ்பா படத்தில் இடம்பெற்ற அல்லு அர்ஜுன் படத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.