பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவான மரைக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம் படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து மோகன்லாலின் இன்னொரு ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் ஆராட்டு படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் நெய்யாற்றின்கரை கோபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் டுவல்த் மேன், பிரித்விராஜ் இயக்கத்தில் புரோ டாடி, ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அலோன் ஆகிய படங்களிலும் மோகன்லால் நடித்து முடித்துவிட்டார். இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் முன்னதாகவே தொடங்கப்பட்ட ஆராட்டு படத்தை முதலில் ரிலீஸ் செய்ய விரும்பும் மோகன்லால், அந்தப்படத்தின் டப்பிங் பணிகளை தற்போது முடித்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் படங்களின் பாணியில் இந்தப்படம் உருவாகியுள்ளதாம்.




