ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவான மரைக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம் படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து மோகன்லாலின் இன்னொரு ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் ஆராட்டு படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் நெய்யாற்றின்கரை கோபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் டுவல்த் மேன், பிரித்விராஜ் இயக்கத்தில் புரோ டாடி, ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அலோன் ஆகிய படங்களிலும் மோகன்லால் நடித்து முடித்துவிட்டார். இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் முன்னதாகவே தொடங்கப்பட்ட ஆராட்டு படத்தை முதலில் ரிலீஸ் செய்ய விரும்பும் மோகன்லால், அந்தப்படத்தின் டப்பிங் பணிகளை தற்போது முடித்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் படங்களின் பாணியில் இந்தப்படம் உருவாகியுள்ளதாம்.