டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
தென்னிந்திய மாநிலங்களில் தெலுங்கிற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள் கேரளாவில் தான் இருக்கின்றனர். சொல்லப்போனால் கேரளாவில் செல்வாக்கு பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் இன்று (டிச-17) வெளியாகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் புஷ்பா படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசும்போது இந்த படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்றை கேரளாவில் படமாக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கோவிட் காரணமாக எங்களால் இங்கே வந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இது படக்குழுவினரை விட எனக்கு ரொம்பவே வருத்தம் தந்தது என்று கூறியுள்ளார்.