டாக்சிக் குறித்து கியாரா அத்வானி பகிர்ந்த தகவல் | ஜனநாயகன் எப்போது ரிலீஸ் : வினோத் கொடுத்த பதில் | ‛வேட்டுவம்' படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த சோபிதா துலிபாலா | ‛சிஸ்டம்' பட வெற்றிக்காக மும்பை மகாலட்சுமி கோவிலுக்கு சென்று நன்றி செலுத்திய ஜோதிகா | ஜெயராமின் காலைத் தொட்டு வணங்கிய தோனியின் மனைவி | ஷாருக்கான், கஜோல் உள்ளிட்ட பல பிரபலங்களை அன்பாலோ செய்த கரண் ஜோஹர் | ஸ்வேதா மேனன் உள்ளிட்ட மூவர் மீது முதலமைச்சரிடம் புகார் கொடுத்த திரிஷ்யம் நடிகை | தமிழ் சினிமாவின் 11வது 300 கோடி படமாக 'கருப்பு' : மற்ற படங்களின் லிஸ்ட் இதோ... | ஐதராபாத்தில் விரைவில் ஐமேக்ஸ் தியேட்டர் | சில வருடங்களில் புஷ்பா 3 : நடிகர் ஜெகபதி பாபு தகவல் |

தென்னிந்திய மாநிலங்களில் தெலுங்கிற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள் கேரளாவில் தான் இருக்கின்றனர். சொல்லப்போனால் கேரளாவில் செல்வாக்கு பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் இன்று (டிச-17) வெளியாகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் புஷ்பா படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசும்போது இந்த படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்றை கேரளாவில் படமாக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கோவிட் காரணமாக எங்களால் இங்கே வந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இது படக்குழுவினரை விட எனக்கு ரொம்பவே வருத்தம் தந்தது என்று கூறியுள்ளார்.




