இது புதிய இந்தியா : துரந்தர் 2 படத்தின் டீசர் வெளியானது | மீண்டும் ஒரு போராளி கதாபாத்திரத்தில் அதர்வா | மழை மனிதன் ஆக மாறினேன் ; 'துரந்தர்' சுவாரஸ்யம் பகிர்ந்த மாதவன் | திருப்தியுடன் வெளியே வருவீர்கள் : ரஜினி ரசிகர்களுக்கு சிபி சக்கரவர்த்தி வாக்குறுதி | ராமுக்கு என்னதான் ஆச்சு? நம்பிக்கையுடன் பேசிய ஜீத்து ஜோசப் | நகைச்சுவை நடிகரை மேடை ஏற்றி மனம் விட்டு பாராட்டிய மம்முட்டி | ஜனநாயகனுக்காக என் படத்தை ஓராண்டு கூட தள்ளி வைப்பேன் : டி ராஜேந்தர் | பிளாஷ்பேக்: தடைகள் மற்றும் சிரமங்களைக் கடந்து வெளிவந்தும், பெரிய வெற்றியைப் பெறத் தவறிய “குறவஞ்சி” | இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ் காலமானார் | தூய்மை பணியாளருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டிய ரஜினி |

தென்னிந்திய மாநிலங்களில் தெலுங்கிற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள் கேரளாவில் தான் இருக்கின்றனர். சொல்லப்போனால் கேரளாவில் செல்வாக்கு பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் இன்று (டிச-17) வெளியாகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் புஷ்பா படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசும்போது இந்த படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்றை கேரளாவில் படமாக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கோவிட் காரணமாக எங்களால் இங்கே வந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இது படக்குழுவினரை விட எனக்கு ரொம்பவே வருத்தம் தந்தது என்று கூறியுள்ளார்.