7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

பழம்பெரும் தெலுங்கு பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி. 37 ஆண்டுகளுகாக தெலுங்கு திரைப்படங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். 66 வயதான சீதாராம சாஸ்திரி நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில மாதங்களாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.
கே.விஸ்வநாத் இயக்கிய ஜனனி ஜன்மபூமி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார். கடைசியாக எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பாடல் எழுதினார். பல்வேறு மாநில விருது பெற்ற அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் சிரிவென்னேலா சீதாராம சாஸ்திரி. அவரது மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது. கவிதை மற்றும் பன்முகத்தன்மை அவரது எழுத்துக்களில் வெளிப்படும். தெலுங்கு மொழியின் புகழுக்காக கடுமையாக உழைத்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.