விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

தொண்ணூறுகளில் மலையாள சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் இறங்கியதால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்தநிலையில் மீண்டும் நடிப்புக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அந்தவகையில் கடந்த வருடம் கொரோனா முதல் அலை துவங்குவதற்கு சற்று முன்னதாக வெளியான 'வரனே ஆவிஷ்யமுண்டு' படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழில் தயாராகி வரும் தமிழரசன் உள்பட நான்கு படங்களில் நடித்துள்ளார் சுரேஷ்கோபி..
கொரோனா இரண்டாவது அலை முடிந்து கேரளாவிலும் இயல்புநிலை துவங்கிய நிலையில் அவர் நடித்துள்ள காவல் என்கிற படம் வரும் நவ-25ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் படங்கள் மூலம் சுரேஷ் கோபியின் இமேஜை தூக்கி நிறுத்திய கதாசிரியரும், நடிகருமான ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் ரெஞ்சி பணிக்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய மம்முட்டி நடித்த கசபா என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.