விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் |
மலையாளத்தில் பிரித்விராஜ் பிஜுமேனன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம் தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பவன் கல்யாண் ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க சாய்பல்லவி நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் கொஞ்ச நேரமே வந்துபோகும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவி மறுத்துவிட்டதால் பின்னர் நித்யா மேனன் ஒப்பந்தம் ஆனார்.
கதைப்படி போலீஸ் அதிகாரியின் மனைவி என்றாலும், நியாயத்துக்காக போராடும் நக்ஸலைட்டாகத்தான் அந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதேசமயம் இந்தப்படத்தில் நடித்து முடித்துவிட்ட நித்யா மேனன் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “இந்தப்படத்தில் எனக்கு மொத்தமே நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பு தான் இருந்தது.. ஆனாலும் ஒரிஜினலில் இருந்த கதாபாத்திரத்தில் இருந்து நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு படத்தில் அதிக நேரம் வரும் விதமாக முக்கியத்துவம் கொடுத்து எனது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.