இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
மலையாள திரையுலகில் எவர்கிரீன் கூட்டணியான மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள படம் தான் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ள இந்தப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது சூழல் சரியில்லாததால் நேரடியாக ஒடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கூறியுள்ளார்.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பில் இந்த முடிவு சலசலப்பையும் வருத்தம் கலந்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “கடந்த மாதம் கூட, ஓணம் பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியிடலாம் என்கிற உறுதியான முடிவில் தான் இருந்தார்கள், ஆனால் அதைவிட இப்போது நிலைமை நன்றாகத்தானே இருக்கிறது. பின் ஏன் தியேட்டர்களில் வெளியிட தயங்குகிறார்கள் என தெரியவில்லை.. இந்த சமயத்தில் மரைக்கார் போன்ற பெரிய படங்கள் தியேட்டர்களில் வெளியாவது தான் சினிமாவை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவரும்” என இந்த கூட்டமைப்பின் தலைவர் விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். எப்படியும் மரைக்கார் படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்..