இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள திரையுலகில் எவர்கிரீன் கூட்டணியான மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள படம் தான் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ள இந்தப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது சூழல் சரியில்லாததால் நேரடியாக ஒடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கூறியுள்ளார்.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பில் இந்த முடிவு சலசலப்பையும் வருத்தம் கலந்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “கடந்த மாதம் கூட, ஓணம் பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியிடலாம் என்கிற உறுதியான முடிவில் தான் இருந்தார்கள், ஆனால் அதைவிட இப்போது நிலைமை நன்றாகத்தானே இருக்கிறது. பின் ஏன் தியேட்டர்களில் வெளியிட தயங்குகிறார்கள் என தெரியவில்லை.. இந்த சமயத்தில் மரைக்கார் போன்ற பெரிய படங்கள் தியேட்டர்களில் வெளியாவது தான் சினிமாவை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவரும்” என இந்த கூட்டமைப்பின் தலைவர் விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். எப்படியும் மரைக்கார் படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்..