'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது அறக்கட்டளை மூலம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரத்ததானம், கண்தானம் செய்யும் பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் இரண்டு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் ரத்த வங்கி அமைத்துள்ளார். இந்த பணியை அவர் இந்தியா முழுக்க விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறார். நாடு முழுக்க ரத்த வங்கியும் கண்தான வங்கியும் ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
இதன் முதற்கட்டமாக ரத்ததானம், கண்தானம் குறித்த தனது இணைய தளத்தை இந்தியாவில் உள்ள 25 மொழிகளில் தொடங்கி உள்ளார். ஐதராபாத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் இதனை தொடங்கி வைத்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது: இனி மொழி பிரச்சினை இன்றி மக்கள் ரத்ததானம், கண் தானம் செய்ய முன் வரலாம். இவர்களுக்காக இனி ஆன்-லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நமக்கெல்லாம் பெருமையாகும். மேலும், கே.சிரஞ்சீவி எனும் புதிய இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிரஞ்சீவி இதுவரை நடித்த படங்கள், பாடல்கள், அவரது வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும். என்றார்.