Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கொண்டான் கொடுத்தான்

கொண்டான் கொடுத்தான்,Kondan Koduthan
  • கொண்டான் கொடுத்தான்
  • கதிர்
  • அத்வைதா
  • இயக்குனர்: ஜி.ராஜேந்திரன்
13 மார், 2012 - 10:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கொண்டான் கொடுத்தான்

தினமலர் விமர்சனம்



இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மாமன் மச்சான்களின் நெருக்க‌த்தையும், கொண்டான் கொடுத்தான் உறவுகளின் மேன்மைகளையும், எடுத்து சொல்லி வெளிவந்திருக்கும் ப(பா)டம் தான் "கொண்டான் கொடுத்தான்" மொத்த படமும்!

ஐந்தாறு தலை முறைகளாக கொண்டான் கொடுத்தான் குடும்பங்களாக வாழ்ந்து வருகிறது இளவரசு-சுலோச்சனாவின் குடும்பமும், இளவரசு தங்கை மீரா கிருஷ்ணன் - எல்.ராஜாவின் குடும்பமும். ஐந்தாறு தலைமுறைகளாக பாசப்பிணைப்புடன் கொண்டான் கொடுத்தான் குடும்பமாக வாழ்ந்து வரும் தங்கள் இரு குடும்பங்களும் பிரிந்து விடாமல் இந்த தலைமுறையிலும் பெண் கொடுத்து, பெண் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இளவரசுவின் மகள் அத்வைதாவை, மீரா கிருஷ்ணனின் மகன் கதிர்காமனுக்கும், மீராவின் மகளை, இளவரசுவின் மகனுக்கும் பேசி முடிக்கிறார்கள். ஆனால் விதி விளையாடுகிறது. அந்த கொண்டான் கொடுத்தான் குடும்பம் இரண்டும் விதிவசத்தால் பிரிகிறது. பிரிந்த குடும்பம் இரண்டும் மீண்டும் சேர்ந்த‌தா...? பேசி வைத்த திருமணங்கள் நடந்ததா...? என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது "கொண்டான் கொடுத்தான்" படத்தின் மீதிக்கதை!

ராசு எனும் கிராமத்து கபடி வீரர் பாத்திரத்தில் கதாநாயகராக கதிர்காமன், தனது முந்தைய படமான வெளுத்து கட்டுவில் நடித்திருந்ததைவிட வித்தியாசமாக நடித்திருக்கிறார். நாயகரைப்போன்றே நாயகி அத்வைதாவும், செவ்வந்தி பாத்திரத்தில் பக்காவாக பளிச்சிட்டிருக்கிறார். கஞ்சா கருப்புவின் காமெடியில் சற்றே காமநெடி தூக்கலாக இருந்தாலும் வழக்கத்திற்குமாறாக ரசிக்கும்படி இருப்பது ஆச்சர்யம்! இதுவே படத்தின் பெரும்பலம். இவர்களைத்தவிர இளவரசு, எல்.ராஜா, சுலோச்சனா, மீரா கிருஷ்ணன், ராஜ்கபூர், அஸ்வின், சீனி உள்ளிட்டவர்களின் பங்கும் பாத்திரங்களும் பெரிய பலம்! அதிலும் இளவரசு, மாமன், மச்சானாகவே வாழ்ந்திருக்கிறார் பலே பலே!

அழிந்துவரும் கொண்டான் கொடுத்தான் குடும்ப உறவுகளுடன், தமிழர்களின் வீர விளையாட்டான கபடிக்கும் கதையில் முக்கியத்துவம் அளித்து இப்படத்தை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கும் ஜி.ராஜேந்திரனை இந்த விஷயங்களுக்காகவே பாராட்டலாம்! சற்று பெரிய இடைவெளிக்குபின் தேவாவின் இசையில் வெளிவந்திருக்கும் இப்பட பாடல்களும் பலம்!

ஆரம்ப காட்சிகளில் கோவணம், மூத்திரம் என அடிக்கடி வரும் டயலாக்குள்... ஊர், உறவு, கபடி என ஒரே இடத்திலேயே சுற்றி வரும் கதை எனும் ஒருசில பலவீனங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் கொண்டான் கொடுத்தான திரைப்படத்தை கொண்டாடலாம்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in