இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
படம் : விருமாண்டி
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : கமல், அபிராமி, பசுபதி, நெப்போலியன்
இயக்கம் : கமல்
தயாரிப்பு : கமல்
நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை, வெவ்வேறு கோணத்தில் சொல்லும், உலகப் புகழ் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின், ரோஷமான் படத்தின் பாணியில் உருவானது, விருமாண்டி. இப்படத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் சண்டியர். இதற்கு அரசியல் ரீதியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தேனி மாவட்டத்தில் நடந்த, இப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, படம் குறித்து விளக்கம் அளித்தார் கமல். இதைத் தொடர்ந்து, படத்தின் தலைப்பு, விருமாண்டி என மாற்றப்பட்டது.
கிராமத்தில், 26 பேர் படுகொலை செய்யப்பட, குற்றவாளிகளான விருமாண்டிக்கு, துாக்கு தண்டனையும்; கொத்தால தேவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது. மரண தண்டனை குற்றவாளிகள் குறித்து ஆவண படம் எடுக்கும் ரோகினி, குற்றவாளிகளான இருவரிடமும் பேட்டி காண்கிறார். நடந்த ஒரு சம்பவம் விருமாண்டியின் பார்வையிலும்; கொத்தால தேவர் பார்வையிலும் சொல்லப்படுகிறது. இப்படம், மரண தண்டனை தேவையில்லை என்பதை வலியுறுத்தியது.
படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும், கமல் ஆச்சரியப்படுத்தினார். தென் கொரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவில், சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதை, இப்படம் பெற்றது. அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றதால், இந்த படத்திற்கு, 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
இளையராஜா, இப்படத்தில் அதகளம் செய்திருந்தார். 'மாட விளக்கை யாரு, சண்டியரே சண்டியரே, கொம்புல பூவச் சுத்தி, ஒன்னை விட...' என, பாடல்களில் துாள் கிளப்பியவர், பின்னணியில் பிரமாண்டம் காட்டினார். ஜல்லிக்கட்டு காட்சியில், ஒளிப்பதிவாளர் கேசவ் பிரகாஷின் கேமரா புகுந்து விளையாடியது. கலை இயக்குனர் பிரபாகர் விருமாண்டி கோவில், குளம், நீதிமன்ற வளாகம், சிறை என, அசத்தியிருந்தார்.
விருமாண்டி மிரள செய்தான்!