ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

படம் : ப்ரண்ட்ஸ்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : விஜய், சூர்யா, தேவயானிஇயக்கம் : சித்திக்
தயாரிப்பு : ஸ்வர்கசித்ரா
இன்றைய மறக்க முடியுமாவில், நேசமணியின், ப்ரண்ட்ஸ்! ஆம்... இப்படத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, ராதாரவி உட்பட பலர் இருந்தாலும், காமெடியில் அடித்து துவம்சம் பண்ணியது, நம்ம 'காண்ட்ராக்டர் நேசமணி' வடிவேலு தான்.
கடந்த, 2001 பொங்கலுக்கு வெளிவந்த இப்படம், பெரும் வெற்றிப் பெற்றது. நேருக்கு நேர் படத்திற்கு பின், இப்படத்தில் தான், விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். படத்தின் விளம்பரத்தில், சூர்யாவிற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது, அப்போது சர்ச்சையை கிளப்பியது.
கடந்த, 1999ல், சித்திக் இயக்கத்தில் வெளியான, ப்ரண்ட்ஸ் என்ற மலையாளப் படத்தைத் தழுவி, தமிழில் உருவானது. இப்படத்தையும், சித்திக் தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜோதிகாவும், சுவலட்சுமியும் நடிக்கவிருந்தனர். பின், தேவயானியும், புதிய முகமான விஜயலட்சுமியும் இடம் பெற்றனர்.
விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா ஆகியோர் நண்பர்கள். இதை உடைக்க முயற்சிக்கும் நபர்களால் ஏற்படும் விபரீதங்கள் தான், படத்தின் திரைக்கதை. துறுதுறு துள்ளளும், குற்றஉணர்ச்சியும் உடைய அரவிந்தன் கதாபாத்திரத்தில் விஜய் சிறப்பாக நடித்திருந்தார். ஆனாலும், கிளைமேக்ஸ் விஜயைத் தான், ஏற்க முடியவில்லை.
மலையாளப் படத்திற்கு இசை அமைத்த இளையராஜா தான், தமிழிலும் இசை அமைத்தார். அனைத்துப் பாடல்களையும் பழனிபாரதி எழுதியிருந்தார். 'தென்றல் வரும் வழியை, குயிலுக்குக் கூ கூ, ருக்கு ருக்கு, மஞ்சள் பூசும், பெண்களோட போட்டி...' பாடல்கள் ரசிக்க செய்தன.
வயிறு வலிக்க சிரிக்க ப்ரண்ட்ஸ் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.ப்ரண்ட்ஸ் வழியே, தமிழர் நெஞ்சங்களில் நேசமணிக்கு என்றும் இடம் உண்டு.




