எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
படம் : ப்ரண்ட்ஸ்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : விஜய், சூர்யா, தேவயானிஇயக்கம் : சித்திக்
தயாரிப்பு : ஸ்வர்கசித்ரா
இன்றைய மறக்க முடியுமாவில், நேசமணியின், ப்ரண்ட்ஸ்! ஆம்... இப்படத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, ராதாரவி உட்பட பலர் இருந்தாலும், காமெடியில் அடித்து துவம்சம் பண்ணியது, நம்ம 'காண்ட்ராக்டர் நேசமணி' வடிவேலு தான்.
கடந்த, 2001 பொங்கலுக்கு வெளிவந்த இப்படம், பெரும் வெற்றிப் பெற்றது. நேருக்கு நேர் படத்திற்கு பின், இப்படத்தில் தான், விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். படத்தின் விளம்பரத்தில், சூர்யாவிற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது, அப்போது சர்ச்சையை கிளப்பியது.
கடந்த, 1999ல், சித்திக் இயக்கத்தில் வெளியான, ப்ரண்ட்ஸ் என்ற மலையாளப் படத்தைத் தழுவி, தமிழில் உருவானது. இப்படத்தையும், சித்திக் தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜோதிகாவும், சுவலட்சுமியும் நடிக்கவிருந்தனர். பின், தேவயானியும், புதிய முகமான விஜயலட்சுமியும் இடம் பெற்றனர்.
விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா ஆகியோர் நண்பர்கள். இதை உடைக்க முயற்சிக்கும் நபர்களால் ஏற்படும் விபரீதங்கள் தான், படத்தின் திரைக்கதை. துறுதுறு துள்ளளும், குற்றஉணர்ச்சியும் உடைய அரவிந்தன் கதாபாத்திரத்தில் விஜய் சிறப்பாக நடித்திருந்தார். ஆனாலும், கிளைமேக்ஸ் விஜயைத் தான், ஏற்க முடியவில்லை.
மலையாளப் படத்திற்கு இசை அமைத்த இளையராஜா தான், தமிழிலும் இசை அமைத்தார். அனைத்துப் பாடல்களையும் பழனிபாரதி எழுதியிருந்தார். 'தென்றல் வரும் வழியை, குயிலுக்குக் கூ கூ, ருக்கு ருக்கு, மஞ்சள் பூசும், பெண்களோட போட்டி...' பாடல்கள் ரசிக்க செய்தன.
வயிறு வலிக்க சிரிக்க ப்ரண்ட்ஸ் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.ப்ரண்ட்ஸ் வழியே, தமிழர் நெஞ்சங்களில் நேசமணிக்கு என்றும் இடம் உண்டு.