600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஆபாசப் படங்கள் தயாரித்து அதனை ஆன்லைனில், வெளியிட்டு கோடிக் கணக்கில் சம்பாதித்தாக, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு உதவி செய்த நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் பட்டியலை தயார் செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ராஜ் குந்த்ராவால் ஆபாச படம் எடுக்கப்பட்ட நடிகைகள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் அவருக்கு உதவி செய்த நடிகைகளிடம் விசாரணை நடந்து வருகிறது. கஜேந்திரா, திண்டுக்கல் சாரதி, குஸ்தி படங்களில் நடித்துள்ள புளோரா மற்றும் ஜெலினா ஜெட்லி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்குந்த்ரா பற்றி இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா ஆபாச பட விவகாரத்துக்கு முன்பே பரபரப்பு பாலியல் புகார் கூறியிருந்தார். அவருடன் பணியாற்றிய போது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் இந்த புகாரின் அடிப்படையில் ஷெர்லின் சோப்ராவுக்கு ராஜ் குந்த்ராவுடன் தொடர்பு இருப்பது உறுதியானது. இதனால் அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
தன் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினாலும் ஆபாச பட வழக்கில் தன்னை கைது செய்ய வாய்ப்பிருப்பதை அறிந்த ஷெர்லின் சோப்ரா மும்பை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஷெர்லின் சோப்ரா போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வழக்கை சந்திக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.