'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
கடந்த சில தினங்களுக்கு முன் மோசடி வழக்கு ஒன்றிற்காக பாலிவுட் நடிகர் சல்மான்கான் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட ஏழு பேருக்கு சம்மன் அனுப்பியது சண்டிகர் போலீஸ். சண்டிகரை சேர்ந்த அருண் குப்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது.
சல்மான் கான் நடத்தி வரும் 'பீயிங் ஹ்யூமன்' என்கிற அறக்கட்டளை சார்பாக இருவர், அருண் குப்தாவை தொடர்பு கொண்டு, இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் விதமாக நகைக்கடை கிளை ஒன்றை ஆரம்பித்து, அதன்மூலம் புதிய வியாபாரம் துவங்குங்கள் என்றும், அதை சல்மான்கான் வந்து அதை திறந்து வைப்பார் என்றும் கூறினார்களாம்.
அவர்கள் பேச்சை நம்பி பீயிங் ஹ்யூமன் ஜுவல்லரி என்கிற பெயரில் கடையை துவங்குவதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் வரை முதலீடு செய்தாராம் அருண் குப்தா.. ஆனால் அவர்கள் சொன்னபடி செய்யவில்லை, அதனால் எனக்கு மூன்று கோடி நஷ்டமானது என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார் அருண் குப்தா
ஆனால் தற்போது ஸ்டைல் கோஷன்ட் என்கிற நகை தயாரிப்பு நிறுவனம் சல்மான்கானுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனது. சல்மான்கானின் பீயிங் ஹியூமன் அறக்கட்டளையின் குளோபல் பார்ட்னராக தாங்கள் இருப்பதாகவும் நகை உருவாக்கம், விற்பனை போன்றவற்றை தாங்கள் தான் மேற்கொண்டு வருவதாகவும் தற்போது புகார் அளித்திருக்கும் நபரின் நிறுவனத்துடன் 2018ல் தாங்கள் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த விஷயத்தில் சல்மான்கானுக்கோ அவரது தங்கைக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என கூறியுள்ள அந்த நிறுவனம், இந்த புகார் குறித்த தங்களது விளக்கங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் காவல்துறைக்கும் அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளது.