காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் |

மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜ், சேனல் ஒன்றின் நிருபராக பணியாற்றிய சுப்ரியா மேனன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2014ல் இவர்களுக்கு அலங்ரிதா என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது ஏழு வயதாகும் இந்த குழந்தை, தனது தந்தை ஒரு நடிகர் மட்டுமல்ல இயக்குனர் என்பதையும் கூட நன்றாக புரிந்து வைத்திருக்கிறதாம்.
அந்த வகையில் சமீபத்தில் தனது குழந்தை எழுதிய பத்து வரி சிறுகதை ஒன்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பிரித்விராஜ், சமீபத்தில் தான் கேட்ட கதைகளிலேயே, மிகச்சிறந்த கதை இதுதான் என்றும், இந்த படத்தை திரைப்படமாக இயக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அப்படி அந்த குழந்தை எழுதியுள்ள கதை இதுதான்.
அமெரிக்காவில் ஒரு அப்பாவும் மகனும் வசிக்கின்றனர். இரண்டாம் உலகப்போர் அங்கு நடந்தபோது, அவர்கள் அங்கிருந்து அகதிகள் முகாமிற்கு இடம் பெயர்கின்றனர். இரண்டு வருடங்கள் அங்கேயே வசிக்கின்றனர். போர் முடிந்தபிறகு, அவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி, சந்தோசமாக வாழ ஆரம்பிக்கின்றனர் என்று, அந்த குழந்தை தனக்கு தோன்றிய ஒரு சிறுகதையை எழுதியுள்ளது. ஏற்கனவே லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறிய பிரித்விராஜ், தனது மகள் சொன்ன கதையிலும் சினிமாவுக்கான அம்சங்கள் உள்ளன என்று கூறியுள்ளதுடன், இந்த கொரோனா தாக்கம் முடிவடைந்த பின்பு இந்த கதையை படமாக்கும் முயற்சியில் இறங்குவேன் என்றும் கூறியுள்ளார்