'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
இந்தியாவின் செஸ் வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் முக்கிய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாகி வருவதை போன்று விரைவில் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கையும் சினிமாவாக இருக்கிறது. இது தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட செக்மேட் கோவிட் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபலங்கள் சிலர் விஸ்வநாதன் ஆனந்துடன ஆன்லைன் மூலமாக செஸ் விளையாடினார்கள். அதன் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் அவருடன் செஸ் விளையாடினார். அப்போது விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கில் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டபோது ஆமீர்கான் கூறியதாவது:
விஸ்வநாதன் ஆனந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கவுரவம், மகிழ்ச்சி. அப்படி நான் நடித்தால் அவரது எண்ணங்களை என மனதில் ஏற்றிக் கொள்வேன். அது இன்னும் உற்சாகத்தை தரும். அவரோடு நிறைய நேரம் செலவிட்டு அவரது மன ஓட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வேன். அவரது குடும்பத்தினரிடமும் பேசி அவரைப் பற்றித் தெரிந்துகொள்வேன். அதன் பிறகு திரையில் அவரைப் போல நடித்து ஆச்சரியப்படுத்துவேன் . எனவே அப்படி ஒரு விஷயம் நடந்தால் அதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன். என்று ஆமிர் கான் பதிலளித்தார்.