மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! |
இந்தியாவின் செஸ் வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் முக்கிய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாகி வருவதை போன்று விரைவில் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கையும் சினிமாவாக இருக்கிறது. இது தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட செக்மேட் கோவிட் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபலங்கள் சிலர் விஸ்வநாதன் ஆனந்துடன ஆன்லைன் மூலமாக செஸ் விளையாடினார்கள். அதன் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் அவருடன் செஸ் விளையாடினார். அப்போது விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கில் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டபோது ஆமீர்கான் கூறியதாவது:
விஸ்வநாதன் ஆனந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கவுரவம், மகிழ்ச்சி. அப்படி நான் நடித்தால் அவரது எண்ணங்களை என மனதில் ஏற்றிக் கொள்வேன். அது இன்னும் உற்சாகத்தை தரும். அவரோடு நிறைய நேரம் செலவிட்டு அவரது மன ஓட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வேன். அவரது குடும்பத்தினரிடமும் பேசி அவரைப் பற்றித் தெரிந்துகொள்வேன். அதன் பிறகு திரையில் அவரைப் போல நடித்து ஆச்சரியப்படுத்துவேன் . எனவே அப்படி ஒரு விஷயம் நடந்தால் அதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன். என்று ஆமிர் கான் பதிலளித்தார்.