நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானின் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகப்போகிறது. தற்போது பதான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அடுத்து அவர் பிரபல இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி டைரக்சனில் நடிக்கப்போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2002ல் வெளியான தேவதாஸ் படத்தில் முதன்முறையாக சஞ்சய்லீலா பன்சாலி டைரக்சனில் நடித்திருந்தார் ஷாருக்கான். அந்தவகையில் 19 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். காதல் கதையாக உருவாகும் இந்தப்படத்தில், தனது காதலை தான் காதலிக்கும் பெண்ணிடம் உணர்த்துவதற்காக உலகத்தில் உள்ள பாதி நாடுகளுக்கு மேல் சுற்றி அலையும் ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளாராம்.