'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானின் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகப்போகிறது. தற்போது பதான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அடுத்து அவர் பிரபல இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி டைரக்சனில் நடிக்கப்போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2002ல் வெளியான தேவதாஸ் படத்தில் முதன்முறையாக சஞ்சய்லீலா பன்சாலி டைரக்சனில் நடித்திருந்தார் ஷாருக்கான். அந்தவகையில் 19 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். காதல் கதையாக உருவாகும் இந்தப்படத்தில், தனது காதலை தான் காதலிக்கும் பெண்ணிடம் உணர்த்துவதற்காக உலகத்தில் உள்ள பாதி நாடுகளுக்கு மேல் சுற்றி அலையும் ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளாராம்.