கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கடந்த 2009ல் சல்மான்கானை வைத்து வான்டட் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இயக்குனராக நுழைந்தார் பிரபுதேவா. அதைத்தொடர்ந்து தபாங் படத்தின் மூன்றாம் பாகமான 'தபாங்-3'யிலும் சல்மான்கானை இயக்கினார். இதோ இப்போது மூன்றாம் முறையாக சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கியுள்ள படம் 'ராதே'. கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த வருடமே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்தநிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தபடம் மே-13ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்தவித கட்டும் சொல்லாமல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் பிரபுதேவாவும் சல்மான் கானும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, குடும்பத்துடன் அனைவரும் இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக படத்தில் 21 இடங்களில் மாற்றங்களை செய்துள்ளார்களாம்.