மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கடந்த 2009ல் சல்மான்கானை வைத்து வான்டட் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இயக்குனராக நுழைந்தார் பிரபுதேவா. அதைத்தொடர்ந்து தபாங் படத்தின் மூன்றாம் பாகமான 'தபாங்-3'யிலும் சல்மான்கானை இயக்கினார். இதோ இப்போது மூன்றாம் முறையாக சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கியுள்ள படம் 'ராதே'. கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த வருடமே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்தநிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தபடம் மே-13ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்தவித கட்டும் சொல்லாமல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் பிரபுதேவாவும் சல்மான் கானும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, குடும்பத்துடன் அனைவரும் இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக படத்தில் 21 இடங்களில் மாற்றங்களை செய்துள்ளார்களாம்.