அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் |

கடந்த ஒரு வருடமாக லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் முடங்கி இருந்த மலையாள படங்கள் தற்போது அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன. அதில் குஞ்சாக்கோவின் படங்கள் தான் அதிகம் ரிலீசாகின்றன என்பது ஆச்சர்யம். கடந்த 20 நாட்களுக்கு முன் இவர் நடித்த மோகன்குமார் பென்ஸ் என்கிற படம் வெளியானது.
அந்தப்படமே இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இன்று குஞ்சாக்கோ நடித்துள்ள 'நாயாட்டு' என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் சராசரி போலீஸ்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஞ்சாக்கோ. துல்கர் சல்மான் நடித்த சார்லி, ஏபிசிடி ஆகிய படங்களை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அதேசமயம் நாளை குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள நிழல் என்கிற படமும் வெளியாகிறது. இந்தப்படத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜான் பேபியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். ஆனால் மாஸ்க் அணிந்த ஒரு ராபின் ஹூட் கதாபாத்திரத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பது போல போஸ்டர்களை வெளியிட்டு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். தவிர இந்தப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.




