ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனர் வரிசையில் முதலிடம் பிடித்தவர் இயக்குனர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி என முன்னனி நடிகர்களை மட்டும் வைத்தே, கிட்டத்தட்ட நூறு படங்களை இயக்கிய ஜோஷி, மலையாள சினிமாவின் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து 'டிவென்ட்-20' என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். இந்தநிலையில் ஜோஷியின் மகன் அபிலாஷும் தந்தை வழியில் இயக்குனராக களம் இறங்குகிறார்.
நடிகர் துல்கர் சல்மான் இவரது டைரக்சனில் நடிப்பதுடன், அந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் என்பவரை, கடந்த வருடம் தான் தயாரித்து, நடித்த 'வரனே ஆவிஷ்யமுண்டு'' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தி இருந்தார் துல்கர்.. இயக்குனர்கள் ஜோஷி, சத்யன் அந்திகாடு போன்றவர்கள் எல்லாம் துல்கரின் தந்தையான மம்முட்டியின் ஆரம்ப கால வளர்ச்சியில் அவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.