தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் |
மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனர் வரிசையில் முதலிடம் பிடித்தவர் இயக்குனர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி என முன்னனி நடிகர்களை மட்டும் வைத்தே, கிட்டத்தட்ட நூறு படங்களை இயக்கிய ஜோஷி, மலையாள சினிமாவின் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து 'டிவென்ட்-20' என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். இந்தநிலையில் ஜோஷியின் மகன் அபிலாஷும் தந்தை வழியில் இயக்குனராக களம் இறங்குகிறார்.
நடிகர் துல்கர் சல்மான் இவரது டைரக்சனில் நடிப்பதுடன், அந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் என்பவரை, கடந்த வருடம் தான் தயாரித்து, நடித்த 'வரனே ஆவிஷ்யமுண்டு'' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தி இருந்தார் துல்கர்.. இயக்குனர்கள் ஜோஷி, சத்யன் அந்திகாடு போன்றவர்கள் எல்லாம் துல்கரின் தந்தையான மம்முட்டியின் ஆரம்ப கால வளர்ச்சியில் அவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.