பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
அமேசன் நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ் தாண்டவ். சைப் அலிகான், டிம்பிள் கபாடியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த சீரிசில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து உத்தர பிரதேசம் உள்பட பல மாநில உயர்நீதி மன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
தொடரில் நடித்தவர்கள், இயக்கியவர், தயாரித்தவர் மற்றும் அமேசான் நிறுவனத்தின் இந்திய ஊடக பிரிவு தலைவர் அபர்ணா புரோகில் ஆகியோர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படக்கூடாது என்று அபர்ணா புரோகில் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை தாண்டவ் தொடரில் இருந்து நீக்கிவிட்டதாகவும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் அமேசன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கற்பனை கதையை அடிப்படையாக கொண்ட தாண்டவ் தொடரில் சில காட்சிகள் பார்வையாளர்களின் மனதை புண்படுத்துவதாக எங்களுக்கு தெரியவந்தது. அந்த காட்சிகளை நீக்கி விட்டோம், சில காட்சிகளை எடிட் செய்து விட்டோம். நாங்கள் பார்வையாளர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.