22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பாலிவுட் நடிகை அமிஷா படேல் மும்பையை சேர்ந்தவர். தமிழில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தாரே, அதே அமிஷா படேல் தான். சில தினங்களுக்கு முன் அகமதாபாத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இவருக்கு 'குஜராத்தின் உண்மையான கவுரவம்' என சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர்.
இவருக்கு வழங்கப்பட இந்த சான்றிதழை ரசிகர்கள் பலர் பார்க்க விரும்பியதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமிஷா படேல். அதேசமயம் தயாரிப்பாளர் அஜய் குமார் என்பவரிடம் 2.5 கோடி வாங்கிய அமிஷா படேல் அதை திருப்பி தரவில்லை என அவர் மீது தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதும், அதற்கு பிப்ரவரி மாதமே பதிலளிக்கும்படி ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டதும் தனிக்கதை. ஆனால் இந்த புகாரில் ஆதாரமில்லை என கூறியுள்ளார் அமிஷா படேல்.