மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, சில நாட்களுக்கு முன்னர் தம்பதிகளாக மாறினர். இவர்களது, திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் மிக பிரம்மாண்டமாய் நடந்தது. கொங்கனி மற்றும் பஞ்சாபி முறைப்படி திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த இருநாட்களுக்கு பிறகே மணமக்களின் போட்டோ வெளியாகின. அந்தளவுக்கு யாரும் போட்டா எடுக்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்போடு திருமணம் நடந்தது.
இந்நிலையில் தீபிகா, ரன்வீர் திருமணம் முடிந்து இந்தியா திரும்பி உள்ளனர். விமான நிலையத்தில் இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்தப்படியாக திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. பெங்களூருவில் ஒரு வரவேற்பும், மும்பையில் ஒரு வரவேற்பும் நடைபெற இருக்கின்றன.