மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சினிமாவில் நடிகைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லை குறித்து ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், டோலிவுட் என பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். பாடகிகளுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாக பாகிஸ்தான் நாட்டு பாடகி மீஷா ஷபி என்பவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்,
பொதுவாக ஒரு துறைக்கு புதிதாக வரும் பெண்கள் தான் பாலியல் தொல்லைக்கு ஆளாவார்கள். ஆனால் நான் பெரிய பாடகியாக பிரபலமான பிறகு அதுவும் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவான பிறகு எனது சக பாடகரான அலி ஜாபர் என்பவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
இது ஒரு முறை அல்ல, பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இதனால் நானும், எனது குடும்பமும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியிருக்கிறோம் என்று கூறும் மீஷா ஷபி, இந்த விசயத்துக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நான் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற விசயங்களை பெண்கள் வெளிப்படையாக பேச வேண்டும். வாய் மூடி இருக்காமல் துணிந்து பேசும் போது தான் இந்த கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முடியும். அப்போதுதான் பாலியல் தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்துள்ளார் மீஷா ஷபி.