இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடும் எதிர்ப்புக்கு இடையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பத்மாவத். இந்தப்படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி கேரக்டரில் நடித்திருந்தார். அப்போது அவர் அணிந்து நடித்த நகைகள், உடைகள் வடநாட்டு மக்களை பெரிதும் கவர்ந்தது.
குறிப்பாக ராஜஸ்தான் பெண்கள் அதனை பெரிதும் விரும்பினார்கள். படப்பிடிப்பில் தீபிகா படுகோனே 35 கிலோ எடை வரையிலான நகை, புடவைகள் அணிந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வடநாட்டு நகை கடைகளில் பத்மாவதி கலெக்ஷன் என்ற தனி பிரிவை தொடங்கியிருக்கிறார்கள். தீபிகா படுகோனே நடித்த காட்சிகளை புகைப்படங்களாக வைத்து அதில் அவர் அணிந்திருந்த நகைகளை அருகில் காட்சிப்படுத்தி விற்பனை செய்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பேன்சி நகை கடைகள், கவரிங் நகை கடைகளிலும் பத்மாவதி நகைகள் விற்கப்படுகிறது. மக்களின் ஆர்வத்தை கண்டு நகை வியாபாரிகளும் பத்மாவதி நகை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
"படத்தின் வசூலை விட பத்மாவதி நகை வியாபாரம் அதிக அளவில் நடக்கும்" என்று வடநாட்டு நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். பத்மாவதியின் நகைகளுக்கு தென்னிந்தியாவில் வரவேற்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.