மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் பிரபல நடிகரான சைப் அலிகானின் இந்தாண்டு ரங்கூன், செப் என இரண்டு தோல்வி படங்களை கொடுத்துள்ளார். தற்போது காலாகண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சைப்பிடம், தோல்வி குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது... படத்தின் வெற்றி நல்ல விஷயம். இருந்தாலும் தோல்வி ஒருபோதும் துவண்டு விட செய்யாது. தற்போது நான் வித்தியாசமான படங்களில், இயக்குநர்களுடன் பணியாற்றி வருகிறேன். இதன்மூலம் என்னை நானே வளர்த்து கொள்ள உறுதுணையாக உள்ளது. தோல்வி ஒரு போதும் என்னை பாதுகாப்பற்றவனவாக ஆக்கிவிடாது. என்னை வைத்து ரசிகர்கள் படத்தை விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியாது, படத்தின் கதை தான் அதை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.