மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருக்கும் பத்மாவதி படம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. படம் ராஜபுத்ர மக்களையும், இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி இருப்பதாக கூறி பல அமைப்புகள் போராடி வருகின்றன. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் படத்துக்கு தடைவிதித்துள்ளன.
ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க எம்பிக்கள் சி.பி.ஜோஷி, ஓம் பிர்லா ஆகியோர் பார்லிமென்ட் நிலைக்குழுவில் படம் பற்றி புகார் அளித்தனர். இது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு பார்லிமென்ட் நிலைக்குழு தணிக்கை வாரிய தலைவருக்கும், படத்தின் இயக்குனருக்கும் சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் சஞ்சய் லீதா பன்சாலியும், தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷியும் நேற்று பார்லிமென்ட் நிலைக்குழு முன் ஆஜரானார்கள். அப்போது சஞ்சய் லீலா பன்சாலி படம் குறித்தும், கதை குறித்தும், அதில் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் எந்த காட்சியும் இல்லை என்பது குறித்தும் சஞ்சய் லீலா பன்சாலி விளக்கம் அளித்தார்.
படத்தின் டீசர் மற்றும் டிரைலர் விளம்பரங்களுக்கு மட்டுமே தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது. படத்திற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்புடைய நிபுணர்களுக்கு படத்தை காட்டிய பிறகே தணிக்கை சான்று வழங்கப்படும் என்ற தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி விளக்கம் அளித்தார்.
படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறாத நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது எப்படி? மீடியாக்கள் இந்த படத்திற்கு அதிக முக்கியத்தும் தருவது ஏன்? சென்சார் போர்டு மீது திரைத்துறையும், மீடியாக்களும் ஆதிக்கம் செலுத்துகிறதா என்பன போன்ற கேள்விகளை பார்லிமென்ட் நிலைக்குழு எழுப்பியது.