மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் ராஜஸ்தானில் உள்ள நகர்ஹர்கா கோட்டையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி என்ற ஹிந்தி படத்தை இயக்கி உள்ளார். ராஜஸ்தானை ஆட்சி செய்த, ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து, இந்த படம் தயாராகிறது. இதில் ராணி பத்மினியாக, தீபிகா படுகோனே நடித்துள்ளார். அவரது கணவர், ரதன் சிங்காக, ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக, ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. படத்தின் இயக்குனர், நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு, மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளன. இதனால், அடுத்த மாதம் வெளியாக இருந்த இந்த படம், 2018க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகர்ஹர்கா கோட்டையில் அடையாள தெரியாத நபர் ஒரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தின் அருகே பத்மாவதி படத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பத்மாவதி படத்தை எதிர்க்கிறோம், நாங்கள் உருவ பொம்மையெல்லாம் எரிக்க மாட்டோடு, கொலை செய்துவிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, பத்மாவதி படம் ரிலீஸாவதில் கடும் சிக்கல் உருவாகி இருக்கிறது.