விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் பிரமாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.O. படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணி நடந்து வருகிறது. இப்படம் 2018-ம் ஆண்டு ஜன., 26-ம் தேதி ரிலீஸாக உள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம் தான் அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பேடுமேன் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2.O படங்களின் வெளியீட்டில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்திற்கு அக்ஷ்ய் குமார் இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பேடுமேன் - 2.O மோதல் குறித்து அக்ஷ்ய் கூறியிருப்பதாவது... "பேடுமேன் படத்தை நான் தயாரித்துள்ளேன். குடியரசு தினத்தில் எனது படம் ரிலீஸாகிறது. அன்றைய தினம் தான் 2.O படமும் ரிலீஸாகிறது. 2.O ரிலீஸானால் நிச்சயம் என் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன், ஒருவேளை அந்தப்படம் ரிலீஸாகவில்லை என்றால் நான் எனது படத்தை ரிலீஸ் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.