மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனைப் போன்ற நபர்கள் இந்திய சினிமாவிலும் இருப்பதாக நடிகை பிரியங்கா சோப்ரா கூறி உள்ளார்.
ஷேக்ஸ்பியர் இன் லவ் என்ற படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹார்வி மீது ஏஞ்சலினா ஜோலி, லுபிடா ந்யாங்கோ உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் பாலியல் புகார் கூறினர்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பாலியல் ரீதியான தொந்தரவு சினிமா துறையில் மட்டும் இல்லை. உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை உள்ளது. இது பாலியல் ரீதியான பிரச்சனை மட்டும் அல்ல, பெண்களின் வலிமையை அடக்கி ஆள நினைக்கும் ஆண்களின் அதிகாரத் தோணி. வெயின்ஸ்டீனைப் போன்ற நபர்கள் இங்கு மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.