புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா |
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர். டுவிட்டர், பேஸ்புக்கில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர். ரிஷிகபூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தொடர்பாக ஜெய் ஹோ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் அப்ரோஸ் மாலிக் என்பவர் ரிஷிகபூரின் டுவிட்டரிலேயே புகார் ஒன்றை கூறியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
புகழ்பெற்ற நடிகர் ரிஷி கபூரின் டுவிட்டரை 26 லட்சம் மக்கள் பின் தொடர்கிறார்கள். ஆனால் அவர் எந்த சமூக பொறுப்பும் இல்லாமல் சிறுவர்களின் ஆபாச வீடியோவை அதில் வெளியிட்டுள்ளார். 26 லட்சம் பேரும் அந்த வீடியோவை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் நிச்சயம் சிறுவர்களும் இருந்திருப்பார்கள். எனவே பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (போஸ்கோ) படி ரிஷி கபூர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெரிவித்திருந்தார்.
இதே புகாரை சைபர் க்ரைம் போலீசுக்கும் அனுப்பி இருந்தார். இந்த புகாரை ஏற்ற மும்பை பாந்த்ரா போலீசார் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.