ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
கைதி நம்பர் 150 படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி, உய்யலவாடா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்க உள்ளார். இது சுதந்திர போராட்ட வீரரின் கதை. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.
இன்னொரு முக்கியமான கேரக்டரில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவியே அவரிடம் நேரடியாக படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.