ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
நடிகை வித்யா பாலன், தற்போது தும்ஹாரி சுலு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வித்யா பாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது பற்றி வித்யா பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. உறுப்பினர் என்ற முறையில், எனது பொறுப்புகதள திறம்பட செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது நமது சினிமா சமுதாயத்தின் உணர்வுகள், யதார்த்தங்கள் மற்றும் பிரச்னைகளை பேசி வருகிறது. இதனை புதிய பாதைக்கு, முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல பாடுபடுவேன் என்றார்.