மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
முன்னாள் காதலர்களான நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரினா கைப் சமீபத்தில் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் மீண்டும் தங்களின் உறவை புதுப்பித்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் கத்ரினாவிடம், இந்நிகழ்ச்சியில் சல்மானுடன் இணைந்து பணியாற்றுவது கடினமானதாக உள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கத்ரினா, இல்லை. சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே. அது அற்புதமான விஷயம். அந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு மட்டுமே இருக்கும்.
அது தொடர்ச்சியாக டிவி ஷோ போன்றது. அவரிடம் நிறைய அன்பு உண்டு. அதன் வெளிபாடு தான் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். நடிகை கத்ரினா தற்போது ஜாக்கா ஜசோஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ஜூலை 14 ரிலீசாக உள்ளது.