கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! |
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தற்போது பத்மாவதி எனும் மற்றுமொரு சரித்திர படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் சஞ்சய் லீலா பன்சாலி, தனது அடுத்தப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்படம் பற்றி இப்போது புதியதகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அபிஷேக்-பிரியங்கா நடிக்க இருக்கும் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவில்லையாம், நடிகர் ரோகித் ராய் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுப்பற்றி ரோகித் ராய் கூறியிருப்பதாவது... "இன்னும் எதுவும் உறுதியாகவில்லை, முடிவானதும் சரியான நேரத்தில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும், அதுவரை காத்திருங்கள்" என்று கூறியுள்ளார்.